12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Webdunia
வியாழன், 5 மே 2022 (07:30 IST)
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் பதட்டமின்றி தேர்வுகளை எழுத வேண்டுமென அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பொதுத் தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்து வந்த நிலையில் இன்று எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் பதட்டமின்றி எழுத வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இன்று நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் என்றும் இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments