Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:03 IST)
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்த கூத்தும் நடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 தினங்களுக்கும் மேலாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 83.37 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 77.44 ரூபாயாக உள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய தேவையுடைய பொருட்கள் அனைத்தும் உயர்வதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசும், மாநில அரசும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments