Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள்; 20 நாட்கள் கண்காணிப்பு

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:06 IST)
கொரனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேரையும் முன்னெச்சரிக்கையாக 20 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.

கொரனா வைரஸால் சீனாவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இதே போல் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் தமிழகத்தில் திருவண்ணாமலைச் சேர்ந்த ஒருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீனாவிலிருந்து தமிழகம் வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு 20 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.

எனினும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments