Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை தேடும் போலீசார் - பழைய வழக்கில் கைது?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (14:22 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜியை கைது செய்யும் முயற்சியில் தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


 

 
கரூர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜியை தமிழக போலீசார் தேடி வருகின்றனர். 
 
2015ம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்தார் எனவும், மற்றொருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்தார் எனவும் சென்னை நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது.
 
ஆனால், அந்த புகாரில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். எந்த இரண்டு வழக்குகளும் தற்போது நிலுவையில் இருக்கிறது.
 
இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள விடுதியில் மற்ற 17 எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருக்கும் அவரை தேடி, மத்திய குற்றப்பிரிவு  காவல் துறையினர் இன்று அங்கு சென்றனர். ஆனால், அவர் அந்த விடுதியில் இல்லை என்பதால், அவர் எங்கே என  போலீசார் தேடி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அவரோடு சேர்த்து, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, தற்போது எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார் செந்தில்பாலாஜி. இந்நிலையில்தான் அவரை விசாரிக்க போலீசார் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், அவரை கைது செய்யும் திட்டமில்லை. வெறும் விசாரணை செய்ய மட்டுமே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments