Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா பரவல்: நாளை முக்கிய அறிவிப்பு என தகவல்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (10:45 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேர்தலுக்கு பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
 
குறிப்பாக இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் சில வதந்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் கொரோனாவி கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கு இருக்காது என்றும் அரசு ஏற்கனவே அளித்த தளர்வுகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
நாளை தமிழக அரசின் சுகாதாரத் துறையில் இருந்து என்ன அறிவிப்பு வெளியாக போகிறது என்பதை அறிய அனைத்து தமிழக மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments