Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த ப்ரியாவின் குடும்பத்திற்கு புதிய வீடு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (13:36 IST)
தவறான சிகிச்சையால் பலியான சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது பிரியாவின் குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு வீடு ஒதுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 தமிழ்நாடு அரசின் நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் ப்ரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று தரப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments