Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரானைட் முறைகேடு: சகாயம் தலைமையிலான விசாரணை குழுவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (20:43 IST)
கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
 
தமிழகத்தில் கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றை அண்மையில் அமைத்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
 
அதில், கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு உள்ளிட்டவை பற்றி ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், புதிய விசாரணையால் தேவையின்றி விவகாரம் நீடித்துக் கொண்டே செல்லும் என்றும், இதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments