Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு தலைமை வழக்கறிஞரை அடுத்து மேலும் 2 வழக்கறிஞர்கள் ராஜினாமா: என்ன காரணம்?

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:54 IST)
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமாவிற்கு காரணம் கூறவில்லை என்றாலும் பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் அலசப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில் மேலும் சிலர் ராஜினாமா செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இரண்டு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்து உள்ளதாகவும் சிலம்பண்ணன் மற்றும் அருண் ஆகியோர் செய்துள்ளதை அடுத்து  11 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்பது பேர் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி முத்துகுமார் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்கள் உள்பட 3 வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு அரசு புதிய கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் குறித்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments