Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனர் திடீர் டெல்லி பயணம்: தமிழக அரசுக்கு ஆபத்தா?

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (18:57 IST)
தமிழகத்தில் தற்போது எத்தனை பிரச்சனைகளுக்காக போராட்டம் நடந்து வருகிறது என்று எண்ணுவது சுலபம் அல்ல. ஒருபக்கம் காவிரி மேலாண்மை வாரியம், இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட், ஒரு பக்கம் நியூட்ரியோனா திட்டம், இன்னொரு பக்கம் நெடுவாசல், ஒரு பக்கம் திரையுலகினர் இன்னொரு பக்கம் இன்சூரன்ஸ் கட்டணத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் என எந்த பக்கம் பார்த்தாலும் போராட்டம் தான் நடைபெற்று வருகிறது. மேலும் மெரீனாவில் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு போல் ஒரு புரட்சி வெடிக்க்கும் என அஞ்சப்படுகிறது

இத்தனை போராட்டங்களையும் சமாளிக்க வேண்டிய மாநில அரசும் உண்ணாவிரத போராட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.10 மணி விமானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக கவர்னர் நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடுத்துள்ளதால் தமிழக அரசுக்கு ஆபத்தா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments