Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:36 IST)
தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அரசின் உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் சில பள்ளிகள் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து அந்த பள்ளிகளை ஆய்வு செய்த முதன்மை கல்வி அலுவலர் அங்கிருந்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியதோடு, பள்ளி நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments