Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11-ஆம் வகுப்புக்கும் இனிமேல் பொது தேர்வு: பரிசீலித்து வரும் அரசு!

11-ஆம் வகுப்புக்கும் இனிமேல் பொது தேர்வு: பரிசீலித்து வரும் அரசு!

Webdunia
வியாழன், 11 மே 2017 (19:34 IST)
இதுவரை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அரசு பொது தேர்வு இருந்து வந்தது. இனிமேல் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அரசு பொது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதனையடுத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவில் ரேங்கிங் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
 
ரேங்கிங் முறையை ஒழித்துள்ள அரசு அதற்கு பதிலாக சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ முறையில் எழுதும் மாணவர்களின் தேர்வு முறையை போலவே முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
மேலும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்ததாக புதிய அறிவிப்பு ஒன்றும் வந்துள்ளது.
 
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை கருத்தில் கண்டு இந்த முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments