Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடம் - ஈஷா யோகா மையம் மீது தமிழக அரசு புகார்

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (17:17 IST)
109 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அங்கீகாரம் பெறாமல் கட்டிடங்களை கட்டியுள்ளதாக ஈஷா யோகா மையம் மீது தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.


 

 
 
 
கோவையில் ஈஷா யோகா மையம் மஹா சிவாராத்திரியை முன்னிட்டு புதிய சிவன் சிலை திறக்கப்பட்டது. இந்த சிவன் சிலை காடுகளை அழித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. ஈஷா யோகா மையம் காடுகளை அழித்து கட்டப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.
 
இந்நிலையில் பழங்குடியினர் பாதுகப்பு சங்க தலைவர், ஈஷா யோகா மையம் 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டுமானம் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் அளிக்க கோரியது. இதற்கு பதில் மனு அளித்த தமிழக அரசு ஈஷா யோகா மையம் மீது புகார் தெரிவித்துள்ளது.
 
ஈஷா யோகா மையம் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியுள்ளது. விதிகளை மீறி கட்டிடங்களை கட்டி வருகிறது என தெரிவித்துள்ளது. மேலும் ஆதியோகி சிவன் சிலை அமைப்பு தொடர்பான ஆவனங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
 
உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments