Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்படையினர் தயார் நிலையில் இருக்க டிஐஜி உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:47 IST)
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் சிறப்பு காவல்படையினரை இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். எந்தவொரு அசாதாரண சூழலையும் சமாளிக்க தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த சுற்றறிக்கை நேற்றே அனுப்பப்பட்ட நிலையில் இன்றுதான் தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக காரணம் எதுவும் வெளியாகவில்லை, ரகசியமாக வைப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த செய்தி ஊடகங்களில் வெளியாக தற்போது காவல்துறையினர் சார்பில் இந்த நடவடிக்கைக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மேலும் இது வழக்காமான நடவடிக்கைதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments