யாரையும் தடுக்கல; கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு வாங்க! – ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதில்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (14:13 IST)
அரசின் செயல்பாடுகளில் திமுக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிர்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து அரசு விழாக்களில் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களை அதிமுக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆய்வு கூட்டங்களில் எம்பியை எப்படி அனுமதிக்க முடியும் என முதல்வர் பேசியது ஜனநாயக விரோதம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்,. யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. விழாக்களில் கலந்து கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என முடிவு வந்தால் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments