Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: தமிழக முதல்வரின் முக்கிய எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (07:47 IST)
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்திகள் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் உறுதி செய்யப்படாத கொரோனா செய்திகளை சிலர் பரப்பி விடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய எச்சரிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இன்றைய சூழலில் பரபரப்புக்காக கொரோனா குறித்த உறுதி செய்யப்படாத செய்திகளை வெளியிட வேண்டாம் என ஊடகங்களுக்கு சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments