Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் - தனபால் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:21 IST)
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவிப்பு. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதாவது, 25 ஆம் தேதி 2021- 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதமும், 26 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மீது 2 ஆம் நாள் பொது விவாதமும், தொடர்ந்து, 27 ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments