Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியா புறக்கணிப்படுவதால் தனிநாடு கோரிக்கை.. துணை முதல்வர் சகோதரர் பேச்சால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (09:58 IST)
தென்னிந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் தென்னிந்தியாவை ஒருங்கிணைத்து தனி நாடு கேட்கும் நிலை ஏற்படும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவக்குமாரின் சகோதரர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நேற்று  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தென்னிந்திய மாநிலங்களின் வருவாய் அள்ளி கொடுக்கப்பட்டாலும் பாரபட்சம் நீடிக்கிறது என டி கே சிவக்குமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறியுள்ளார். இதே நிலை நீடித்தால் தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கூறும் நிலைமை உருவாகும் என்று எச்சரித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் காங்கிரஸ் கட்சியின் கொள்கை தனி நாடு கேட்பது அல்ல என்று தெரிவித்தார்.

ALSO READ: இன்று முதல் சென்னை - ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை: பயணிகள் மகிழ்ச்சி.!

இதே கருத்தை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் தெரிவித்துள்ளார். தனி நாடு என்பது காங்கிரஸ் கொள்கை அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனிநாடு கோரவில்லை என்றும்  அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments