Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் அழகிரிக்கு, திருப்பரங்குன்றம் தினகரனுக்கு: இணையத்தில் பரவும் வதந்திகள்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:11 IST)
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரை அதிமுக இழந்தது போல் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரை இழந்துவிடக்கூடாது என திமுக அதீத முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால் திருவாரூர் தொகுதியை கைப்பற்றி தனது செல்வாக்கை நிரூபித்து ஆகவேண்டும் என்று அழகிரி வரிந்து கட்டிவருவதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் தினகரன் முதல் ஆளாக தேர்தல் வியூகம் அமைத்து இரண்டு தொகுதிகளிலும் களத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் எடுத்த கருத்துக்கணிப்பின்படி திருவாரூர் அழகிரிக்கு சாதகமாக இருப்பதாகவும், திருப்பரங்குன்றம் தினகரனுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலுக்கு முன்பு சுயபரிசோதனையாக இருக்கும் இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக, திமுக தோல்வி அடைந்தால் நிச்சயம் திராவிட ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments