Webdunia - Bharat's app for daily news and videos

Install App

303 வாக்குச்சாவடி,புகார் எண்(18004257035 ) - இடைத்தேர்தல் வேலைகள் ஆரம்பம்..

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (13:03 IST)
திருவாரூரில் தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் வாக்குச்சாவடி விவரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

திமுக தலைவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர்  5 மாத காலமாக காலியாக உள்ளது.அதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய பெரியக் கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை. தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று ஆரம்பித்துள்ளது.

தேர்தல் பணிகளை ஆரம்பித்து வைத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூரில் மொத்தம் 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும். தேர்தல் சம்மந்தமாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டுமென்றால் 18004257035 என்ற இலவச எண்ணுக்கு அழைத்துக் கூறலாம் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments