Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனைக் கட்டிப் போட்டு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (08:12 IST)
நெல்லை நாங்குநேரி அருகே காதலனுடன் சென்ற பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளைய சேர்ந்த கணினி வல்லுநர் ஒருவர் தனது காதலியுடன் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது நாங்குநேரி அருகே ஜீயர்குளம் பகுதயில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர். காதலனைக் கட்டிப் போட்ட அந்த மர்ம கும்பல் இளம்பெண்ணை தனியிடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துளளது.

மேலும் காதலர்களிடம் இருந்து லேப்டாப், செல் போன்கள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!