Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உள்வாங்கிய கடல்.. திருச்செந்தூர், கன்னியாகுமரியில் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (14:37 IST)
திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்
 
தமிழகத்தில் உள்ள கடற்கரையில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக திருச்செந்தூரில் அடிக்கடி கடல் வாங்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று திடீரென திருச்செந்தூர் கடல் சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது இதனால் பாறைகள் வெளியே தெரிந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்
 
அதேபோல் கன்னியாகுமரியிலும் இன்று காலை கடல் உள்வாங்கி காணப்பட்டதாகவும் இதனால் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஒரு சில மணி நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், அமாவாசை பௌர்ணமி ஆகிய நேரங்களில் கடல் உள்வாங்குவதும் அதன்பின் சில மணி நேரத்தில் இயல்புநிலை திரும்புவதும் வழக்கம் என்றும் மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments