Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்ளக் விழாவில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:25 IST)
சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய தனது கருத்து பெரும் சர்ச்சையானதை அடுத்து அந்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி ஆவேசமாக சில கருத்துக்களை பேசினார். குறிப்பாக சசிகலா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இதே விழாவில் அவர் நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்ததை அடுத்து அவர் இன்று அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் 
 
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காக அரசியல்வாதிகள் தேடுகிறார்கள் என துக்ளக் விழாவில் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார். நீதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் என்று தவறாக குறிப்பிட்டுவிட்டதாகவும் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments