Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கருத்துக்கணிப்பு பொய்யானது: குமுறும் வைகோ!

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (15:03 IST)
தினமலர், நியூஸ்7 தொலைக்காட்சி இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


 
 
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, இந்த கருத்துக்கணிப்பு குறித்து விமர்சித்தார். இந்த கருத்துக்கணிப்பு திமுகவை வெற்றி பெற வைக்கும் சதி திட்டம் எனவும் இது பொய்யான கருத்துக்கணிப்பு எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
திமுகவினர்களை பார்த்து கேள்விகளை கேட்டு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர் என கூறிய வைகோ, பென்னாகரத்தில் போட்டியிடும் அன்புமணி 3-வது இடத்தை பிடிப்பார் என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதை ஏற்க மறுத்தார்.
 
இது குறித்து கூறிய அவர், பாமக எங்கள் எதிரியாக இருந்தாலும், இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது தவறானது. மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவும் என கூறப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். எங்களை சோர்வடைய செய்யும் சதி ஆகும். இதனை முறியடித்து எங்கள் அணி வெற்றி பெறும் என கூறினார் வைகோ.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments