Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்., திமுகவை அடிக்க இதுதான் சரியான ஆயுதம்.. கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர் மோடி!

Prasanth Karthick
ஞாயிறு, 31 மார்ச் 2024 (12:55 IST)
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.



மக்களவை தேர்தலின் முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த முறை தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என மத்திய பாஜக முயற்சித்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள், இலங்கை தமிழர் படுகொலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கச்சத்தீவு குறித்த ஆவணங்களை பெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு எப்படி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளதாக கூறியிருந்தார்.

தற்போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அந்த தகவல் சார்ந்த செய்தியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “கண் திறந்து திகைக்க வைக்கிறது! #கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது மற்றும் மக்கள் மனதில் மீண்டும் காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ALSO READ: வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பலாப்பழத்துடன் கிளம்பிய மன்சூர் அலிகான்! – ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்?
 
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதில் காங்கிரஸின் 75 ஆண்டு கால ஆர்வம் தொடர்ந்து வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “50 வருடமாக திமுக செய்து வரும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தின் சாயம் வெளுத்தது. அன்று காங்கிரஸுடன் இணைந்து நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்த கூட்டம் இன்று பிரிவினை வாதம் பேசுகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பாஜகவின் முக்கிய புள்ளிகள் கச்சத்தீவு விவகாரத்தை இழுத்து பேசுவதன் மூலம் தமிழ்நாடு அரசியலில் இந்த விவகாரத்தை காங் – திமுக கூட்டணிக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments