Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக செய்ய வேண்டியது இதைத் தான்; ஸ்டாலின் கருத்து

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (08:57 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக வின் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் தான் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு முடிவடைந்தது. ஆனாலும், மத்திய அரசு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று நவநீத கிருஷ்ணன் பேசியதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரே வழி அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும்  ராஜினாமா செய்வது தான். அவ்வாறு செய்தால் தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தயார். இப்படி நம் எதிர்ப்பை காட்டினால் தான், மோடி அரசு காவிரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments