Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத யாத்திரை எதிரொலி: திருமாவளவன் உள்பட முக்கிய தலைவர்கள் கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (08:57 IST)
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரதயாத்திரை இன்று கேரளாவில் இருந்து தமிழக எல்லையான செங்கோட்டையில் நுழையும் என்று கூறப்படும் நிலையில் இதனை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தால் அதனை தடுக்கும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் நெல்லை மாவட்டத்திற்கு விரைந்தனர்

இந்த நிலையில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கைது செய்யப்பட்டார். அதேபோல் மனித உரிமை கட்சி தலைவர் ஜாஅஹிருல்லா, தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டனர்,. மேலும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல்லை எல்லையில் சோதனை சாவடி ஏற்படுத்தப்பட்டு தகுந்த சோதனைக்கு பின்னரே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்களா? அமெரிக்க அதிகாரி தகவலால் பரபரப்ப்பு..!

ஆதி திராவிடர் கல்வி கடன் ரத்து; சாதிய பாகுபாடைத் தூண்டும் முயற்சி! - பாஜக அண்ணாமலை கண்டனம்!

தந்தையின் உடலை இரண்டாக வெட்ட கோரிக்கை வைத்த மகன்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னையை மூடிய அடர்பனி.. இறங்க முடியாமல் வட்டமடிக்கும் துபாய் விமானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments