Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவன் அரிமா போலே.. கவிப்பெரு வேந்தரே! – ஒருவரையொருவர் புகழும் திருமா, வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:28 IST)
மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவிதை எழுதிய வைரமுத்துவுக்கு கவிதை மூலமாகவே நன்றி தெரிவித்துள்ளார்.

மனுதர்மத்தில் பெண்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் திருமாவுக்கு ஆதரவாக கவிதை பதிவிட்ட வைரமுத்து ”திருமா தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே என்றும், திருமாவை அரிமா (சிங்கம்) என்றும் வர்ணித்து கவிதை ஒன்றை வெளியிட்டார். அதை தொடர்ந்து வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள திருமாவளவன் “நேர்மைத் திறம்வாய்ந்த நெஞ்சுரம் வலுமிகுந்த நீதிமிகு அறம்தோய்ந்த நெறிபிறழா நிறைகூற்று! கவிப்பெரு வேந்தர்வீசும் கருத்துப் போர்வாளிங்கே காக்கும் மகளிர்நலத்தை! கருக்கும் மனுவாதத்தை!” என்று கவிதை நடையிலேயே நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments