Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுபோன்ற போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது - ரஜினிகாந்த்

Webdunia
திங்கள், 28 மே 2018 (20:14 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் நடைபெற கூடாது என்று ரஜினிகாந்த கூறியுள்ளார்.

 
கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
 
இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலை நிரந்தரமாக மூடுவதாக அரசாணையை பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
 
தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பே செய்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments