Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை! – தேனியில் கொடூரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:04 IST)
தேனியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூதாட்டி ஒருவரை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பியதில் மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து உடனடியாக தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த ஞானநேசன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஞானநேசன் தான் குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த உண்மை வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்