Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (10:35 IST)
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் தேனியிலிருந்து சென்ற அரசு பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 
தேனியில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த போது ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதி அருகே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
 
இந்த விபத்தில் ஆட்டோ பஸ்சுக்கு அடியில் சிக்கி நசுங்கியதால் அதிலிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். ஆண்டிப்பட்டியில் மழை பெய்து கொண்டிருந்ததால் எதிரே வந்த வாகனம் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் பற்றிய விபரங்களை ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments