Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலை உடைத்து அம்மனின் தாலி திருட்டு! – சென்னையில் பயங்கரம்!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (19:39 IST)
சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள அம்மன் கோவிலில் புகுந்த மர்ம கும்பல் அம்மன் தாலியை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் செல்வகணபதி நகர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று மதியம் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி முதலியவற்றை திருடி சென்றுள்ளனர்.

காலையில் வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்படிருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் கோவில் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் திருடர்கள் பைக்கில் வந்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவற்றை ஆதாரமாக கொண்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments