Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்ற மாணவன்... தீப்பிடித்ததால் விபரீதம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:45 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என்ற பகுதியில் இயங்கிவந்த ஒரு தனியார் பள்ளியில், நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிச் சென்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல பள்ளிகள் இணைந்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர், இதில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் பொறுப்பு 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர், விக்னேசுக்கு தரப்பட்டது.
 
இந்நிலையில், அந்த ஒலிப்பிக் தீப்பந்தத்தில் எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது. மாணவர் இந்த தீபத்தைப் ஏந்திக்கொண்டு ஓடும்போது, பலாமாக காற்றடித்ததில் அவர் மீது தீ பட்டு, அவரது உடல் முழுவதும் பரவியது. பின்னர் அவரை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments