Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் திட்டியதால்...மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன் !

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:23 IST)
கர்நாடக மாநிலத்தில்  ஆசிரியர் திட்டியதால் மாடியில் இருந்து மாணவன் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வருபவர் மோஹின். இவர் அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார்.

அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: 10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
 
இதுகுறித்து, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸிக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைவில் வந்த போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments