Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் துறையிலும் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை: ஜி.கே.வாசன்

தனியார் துறையிலும் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை: ஜி.கே.வாசன்

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (04:30 IST)
தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று  ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
 
தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது வரவேற்கதக்கது.
 
எனவே, இதனை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டு, நிறைவேற்ற தேவையான சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.மேலும், இதை கண்காணிக்க தனிக்குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Show comments