Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு சட்டை தான்...நைசாக ’பைக்’கை திருடிய நபர் ...சிசிவிடி காட்சி வெளியீடு ! வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (17:55 IST)
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவ மனோகர்.இவர் பொதுஇடங்களுக்கு வாகனத்தில் சென்று தேனீர் விற்பனை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே கார் நிறுத்தி வைக்கும் இடத்தில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு மக்களிடம் டீ விற்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை. 
 
அதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் போலீஸாரிடம் சென்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, சிவப்புச் சட்டை அணிந்த ஒருவர் மனோகரனின் வாகனத்தை திருடிச் செல்லுவது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments