மொழிப்பாடம் தேர்வு தேதி மட்டும் தேதி மாற்றம்: மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:48 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படும் அல்லது ஆன்லைனில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
பிளஸ் டூ தேர்வில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மொழிப் பாடம் தேர்வு மே 3ஆம் தேதிக்கு பதிலாக மே 31-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
மொழிப்பாடம் தவிர மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடக்கும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிளஸ்டூ தேர்வு நடத்துவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments