Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65 நாட்களுக்கு பின்னர் வெளியாகும் ஜெ. புகைப்படம்?: ஆசி பெற போகும் புதிய எம்எல்ஏ-க்கள்

65 நாட்களுக்கு பின்னர் வெளியாகும் ஜெ. புகைப்படம்?: ஆசி பெற போகும் புதிய எம்எல்ஏ-க்கள்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (09:36 IST)
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்ற ஆகிய மூன்று தொகுதிகளிலும் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
வெற்றி பெற்ற மூன்று பேரும் எம்எல்ஏக்களாக சபாநாயகர் அறையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த பதவியேற்புக்கு பின்னர் அவர்கள் அப்போலோவில் கடந்த 65 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், வெற்றி பெற்ற மூன்று பேரும் முதல்வரை சந்திக்க உள்ள நிலையில் அந்த புகைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments