Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்.! டிஐஜி உள்ளிட்ட 14 அதிகாரிகள் மீது வழக்கு..!

Senthil Velan
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:10 IST)
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
 
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொலை குற்றத்திற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். 
 
காவல் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக தனது மகன் மீது குற்றம் சாட்டி கடுமையாக தாக்கியதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலக்ஷ்மி மற்றும்  சிறை அதிகாரிகள் என 14 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கட்டாய வேலை வாங்குதல், சட்ட விரோத சிறைவைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ALSO READ: இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? காங்கிரசா.? அண்ணாமலை கேள்வி..!


மேலும் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கி உள்ள சிபிசிஐடி போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments