Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பேஸ்புக்கில் பதிவிட்டவரை நாடு கடத்திய அரசு’

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (13:44 IST)
சமீபத்தில் தீவிரவாதத்தின்  கோர வடிவம் பல்வேறு நாடுகளையும் பாதித்து வருகிறது. சென்ற மாதம் இந்தியாவில் காஸ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் உள்ள திவிரவாத கும்பல். இதேபோல் கடந்த வெள்ளிகிழமை அன்று நியூஸிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர் நகரில் உள்ள இஸ்லாம் மசூதி கூடத்துக்குள் புகுந்த இளைஞர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 இந்தியர் உள்பட 50 பேர் பலியாகினர்.
அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்திய பிரண்டன் டாரண்ட் என்பவரை (28) காவல் துறை கைது செய்தது. இவர் ஆஸ்திரேலியர் ஆவார்.
 
இந்த தாக்குதலுக்கு உலக்கிலுள்ள பல்வேறு நாடுகள் கண்டனக்குரலை எழுப்பின. இந்ந்நிலையில் ஐக்கிய அமீரகத்தின் டிரான்கார்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் இந்த தாக்குதலுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அமீரக அரசு பேஸ்புக்கில் பதிவிட்டவரை பணியை விட்டு நீக்கியது. தற்போது அவரை நாட்டை வெளியேற்றியுள்ளது.
 
உலக நாடுகளோடு இணைந்து ஐக்கிய அமீரக அரசும் தீவிரவாதத்தை ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments