Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:44 IST)
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு விரைந்து வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வும் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 10,000 கோடியை உடனே வழங்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,  எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 170 பேர் பலியாகியுள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு விரைந்து வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வும் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 10,000 கோடியை உடனே வழங்க வேண்டும்.
 
வெள்ள நிவாரண பணிகளை அரசியல் பார்வையின்றி அனைத்து அரசியல் இயக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments