Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய கிணற்றில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியின் சடலம்- போலீஸார் விசாரணை

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (21:48 IST)
கரூர் மதுரை தேசியநெடுஞ்சாலை பகுதியில் உள்ளது சுக்காலீயூர் கிராமம் இப்பகுதியில் விவசாயம் நிறைந்த பகுதியாகும் அப்பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றுவதற்காக வந்த போது கிணற்றில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியி் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்டி அதிர்ச்சியடைந்தார். 
உடனே பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் செந்தில் பார்வையிட்ட பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்டு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் போலீஸார் விசாரனை செய்ததில் இறந்த மூதாட்டியின் பெயர் பேச்சியம்மாள் என்பது அவர் அதே பகுதியில் வசித்து வந்தார் என்பது தெரியவந்தது. 
 
பிரேதத்தை கரூர் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்தவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா தற்கொலையா என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments