Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைடு வாங்கி மின்கம்பத்தில் உரசிய பஸ்; மின்சாரம் தாக்கி பயணிகள் பலி! – தஞ்சாவூரில் சோகம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:39 IST)
தஞ்சாவூரில் தனியார் பேருந்து ஒன்று சாலையில் ஓரமாக ஒதுங்கியபோது மின் வயர்கள் பயணிகள் மீது உரசி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் – கல்லணை வழியாக செல்லும் தனியார் பேருந்து ஒன்று வழக்கம்போல சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் செல்ல வழிவிடும் வகையில் ஒரமாய் ஒதுங்கியது. சாலை குறுகலாக இருந்ததால் வண்டி ஓரம்கட்டப்பட்டபோது பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் சரிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது சாய்ந்தது.

இதனால் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றிருந்த பயணிகள் மீது மின் வயர்கள் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments