பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

Mahendran
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (13:02 IST)
பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 1 மற்றும் 2-ஆம் கட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, 118.9 கி.மீ நீளத்திலான புதிய 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் தற்போது முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.
 
பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளத்திற்கு மேல், போரூர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இம்மாத இறுதியில், 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ தூரத்திற்கு நடக்கவுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி 2.5 கி.மீ தொலைவுக்கு முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
 
பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துக்குள் செயல்பாட்டிற்கு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments