Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாம் மறைவுக்கு துக்கம் அனுசரிக்காத நகராட்சியை கண்டித்து பெண் கவுன்சிலர் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (02:57 IST)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு துக்கம் அனுசரிக்காத, தென்காசி நகர்மன்ற நிர்வாகத்தை கண்டித்து,  பெண் கவுன்சிலர் மாரிசெல்வி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய திருநாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
 
இந்நிலையில், தென்காசி நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர் மன்றத் தலைவர் பானு தலைமையில் நடை பெற்றது. நகர் மன்ற கூட்டம் தொடங்கிய போது, 29ஆவது வார்டு சுயேட்சை  கவுன்சிலர் மாரிசெல்வி எழுந்து பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு இன்று நாடே துக்கம் அனுசரித்து வருகிறது. எனவே, இந்த கூட்டத்தை நீங்களே ஒத்திவைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. நான் கோரிக்கை வைத்தும் அதை செய்ய முன்வரவில்லை. எனவே, நகராட்சி கூட்டம் நடத்தியதைக் கண்டித்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி,  தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் பானுவிடம் வழங்கினார். அதை தலைவர் பானுவும் ஏற்றுக் கொண்டார்.
 
இந்த நாட்டில் சாதரண பதவியைக்கூட வைத்து பலரும், பணம் பார்த்து வரும் நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்காக பெண் கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments