Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி ஸ்ட்ராங் ரூமில் 93 சிசிடிவிக்கள் பழுது: அதிருப்தி தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

Siva
புதன், 1 மே 2024 (09:14 IST)
தமிழகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் 24 மணி நேரமும் சிசிடிவி செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கோவை, நீலகிரி உள்பட ஒரு சில பகுதிகளில் சிசிடிவி பழுதானது அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தென்காசியிலும் 93 சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறிய போது தென்காசி ஸ்ட்ராங் ரூமில் 93 சிசிடிவிகள் பழுதானதாக கூறுவது நம்பும்படி இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் சாஹூ நேரில் சென்று ஆய்வு செய்து உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் மக்கள் தீர்ப்பை முறைவேடாக மாற்றும் திட்டத்தில் எவர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது என்றும் மின்தடை ஏற்பட்டாலும் யுபிஎஸ் மூலம் அனைத்து சிசிடிவிக்களூம்  இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments