Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (08:40 IST)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.
 
மதுவுக்கு எதிராகப் போராடிய சசி பெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்குப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
நேற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் அந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடைக்கு மர்மநபர்கள் தீவைத்தனர்.
 
இதனால், அந்தக் கடையில் இருந்த சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments