Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெக்க வேண்டாம்! – ஆசிரியர்கள் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:06 IST)
கொரோனா தளர்வுகளை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில் விரைவில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால் பாடங்களை நடத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி சுமை அதிகரிப்பதாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments