Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்திய ஆசிரியர்!

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:34 IST)
திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை  மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
திருச்சி மாவட்டதில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில், தீனா மேரி என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
 
அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ பாடம் நடத்தி கொண்டிருந்தார், அதனை கவனிக்காமல் அந்த மாணவி சக மாணவியுடன் மாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த ஊசியை மாணவிக்கு போட்டுள்ளார். இதனால் மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ மீது மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் ஆசிரியரை விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments