Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை!

டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (10:11 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். இதனையொட்டி தமிழக டாஸ்மாக் மதுபான கடைகள் பார்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இதனையடுத்து தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது. கேரளா, புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
 
இந்திய அரசும் ஜெயலலிதா மறைவை அடுத்து ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. பல மாநில முதல்வர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
 
ஜெயலலிதா மரணமடைந்த செய்தி வெளியானதும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பார்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments