Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்க்காலில் கவிழ்ந்த டேங்கர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:09 IST)
நாகையில் கச்சா எண்ணெயை ஏற்றி கொண்டு வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது.

திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து டேங்கர் லாரியில் 25 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கருவேலங்கடை என்ற இடத்தில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் வெளியேறி வயல்களில் கொட்டியது. இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் டேங்கர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ஆளுனர் அனுமதியளித்த அடுத்த நாளே நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments